×

10அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

 

சிவகங்கை, பிப்.23: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் அலுவலகப் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பணியிறக்கத்தால் பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்களுக்கு பணி பாதுகாப்பு அரசாணை வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் திருத்த அரசாணை வெளியிட வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் செலவினங்களை எதிர்கொள்ள முன் கூட்டியே நிதி ஒதுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் தமிழரசன், மாவட்டத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தனர். இதில் ஏராளமான வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

The post 10அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Revenue department ,Sivagangai ,Tamil Nadu Revenue Department Officers Association ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...